-----------------------------------------------------------------------------------------------------------
காதலாகி கசிந்துருகி - பகுதி 12
காதலாகி கசிந்துருகி - பகுதி 12
----------------------------------------------------------------------------------------------------------
அதிகாலை நேரம். இன்னும் மழை பெய்து கொண்டிருந்த சத்தம் சிறிதாக கேட்டது. ராஜேஷ் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தான். அவன் மார்பில் முகம் புதைத்து அவன் மீது படர்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தான் அர்ஜூன். ராஜேஷின் கைகள் மெதுவாக அர்ஜூனின் பின் தலையை வருடின. அவன் மார்பு பெருமிதத்தில் மூச்செறிந்தது. இதோ அவன் எத்துனையோ இரவுகளில் அதிகாலைகளில் எதிர்பார்த்திருந்த அந்த அணைப்பு. இப்போது அவனுக்கு பரிபூரண திருப்தி. இதை முடித்துக் கொள்ளவே அவன் விரும்பவில்லை. அர்ஜூனின் உடல் வெதுவெதுப்பாக இருந்தது. அவர்கள் மீது போர்வை எதுவும் இல்லை. ஆனாலும் அவர்களுக்கு குளிரவில்லை.
இருவரின் எதிர்காலத்தைப் பற்றியும் அவர்கள் இருவருமே யோசிக்காது இப்போதுதான் தொடங்கியிருந்த அந்த இன்பமான தருணங்களை ரசித்தனர். ராஜேஷ் எழுந்திருக்க மனமின்றி அப்படியே மீண்டும் உறங்கிப் போனான். அர்ஜூன் மெதுவாக விழித்தான். தான் ராஜேஷ் மீது படுத்திருப்பது அவனுக்குப் புரிந்தது. அவன் முகத்தில் ஒரு புன்னகை முளைத்தது. ராஜேஷின் உடல் சூட்டின் அவன் அப்படியே ஒட்டிக் கிடந்தான். ராஜேஷின் மார்பிலுள்ள ரோமங்களில் தன் முகம் புதைத்து அவன் வாசம் பிடித்து அவன் ஆண்மை நிறைந்த தேகத்தை அணைத்து படுத்திருப்பதில் அவன் சொர்கலோக இன்பத்தை உணர்ந்தான். ராஜேஷ் மீண்டும் எழுந்து அர்ஜூனின் பின் தலையை தடவினான்.
“ராஜேஷ்….” அர்ஜூன் அழைத்தான்.
“சொல்லுடா செல்லம்…” ராஜேஷ் கேட்டான்.
“ராஜேஷ்…” அர்ஜூன் மீண்டும் சொன்னான்.
“ம்ம்ம்ம்…. சொல்லுடா குட்டி…” ராஜேஷ் மீண்டும் கேட்டான்.
“ம்ம்ம்… ஒண்ணுமில்ல…” அர்ஜூன் தயங்கினான்.
ராஜேஷ் மெதுவாக அர்ஜூனை அருகில் கிடத்தினான். அவன் மீது ஏறி படர்ந்தான். பின் அவன் உச்சந்தலையில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டான்.
“ஏய்… அர்ஜூன்… எதுவாயிருந்தாலும் நீ எங்கிட்ட சொல்லணும்… அப்பத்தானே நான் என்னனு புரிஞ்சிக்க தெரிஞ்சிக்க முடியும்….” ராஜேஷ் மெதுவாகச் சொன்னான்.
“அது வந்து… ராஜேஷ்…. நீ என்னை முழுசா எடுத்துக்கணும்… என்னை முழுசா அனுபவிக்கணும்… நான் உன்னுடைய சொத்தா மாறணும்…” அர்ஜூன் சொன்னான்.
“நீ இப்பவே என்னோட சொத்துதான்… உன்ன யாரும் நெருங்க நான் விடமாட்டேன். நீ என்ன எவ்ளோ சுயநலவாதினு நினச்சாலும் தப்பில்ல.. நான் உன்ன யாருக்கும் கொடுக்கமாட்டேன். நீ முழுசா, மொத்தமா எனக்கு மட்டும் தான் சொந்தம் அர்ஜூன்.. உன்னோட ஒவ்வொரு அங்குல உடம்பும், உன்னோட ஒவ்வொரு துளி அன்பும் காதலும் பாசமும் எனக்கு மட்டும் தான். யாருக்கும் ஒரு சிறு பங்கு கூட கிடையாது….” ராஜேஷ் ஆவேசமாகச் சொன்னான்.
அர்ஜூனின் காதுகளில் தேன் பாய்ந்தாற்போல் இருந்தது.
“அப்ப என்ன முழுசா அனுபவி ராஜேஷ்… என்னை முழுசா புணர்ச்சி கொள்… நான் சொல்றது புரியும்னு நினைக்கிறேன்… என்னில் நுழைந்து உன்னைக் கலந்து விடு ராஜேஷ்… “ அர்ஜூன் மிக மிக மென்மையாக ராஜேஷின் காதுகளில் சொன்னான்.
“இல்ல அர்ஜூன்… எனக்கு அதுல கொஞ்சம் பயம் இருக்கு… நீயே பார்த்த இல்ல நான் எவ்ளோ பெரியவன்னு… உனக்கு வலிக்கும். ரொம்ப வலிக்கும். நீ மென்மையானவன் அர்ஜூன்… உனக்கு வலியைக் கொடுக்க நான் விரும்பல… வேணாம் அர்ஜூன்…. ப்ளீஸ்…” ராஜேஷ் கெஞ்சினான்.
“ராஜேஷ்… ஒரு கணவன் மனைவிக்கு வலிக்கும்னு அவளுடன் உறவு கொள்ளாமல் இருக்க முடியுமா? அதுபோல தான் இதுவும். நான் உன் உறவு.. என்ன நீ எடுத்து அனுபவிக்கறதால எனக்கு வலிக்கும்னா அந்த வலியும் எனக்கு பிடிக்கும்…” அர்ஜூன் சொன்னான்.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“உண்மையிலேயே அதுதான் காரணமா…? இல்ல என்னை உனக்குச் சரியா பிடிக்கலயா ராஜேஷ்….? எதுவாயிருந்தாலும் பரவாயில்ல சொல்லு….” அர்ஜூன் சொல்லும்போதே கதறி அழத் துவங்கினான்.
“நீ என்னை சரியா விரும்பலயோன்னு எனக்கு ஒரு பயம் வந்துடுச்சு… சாரி.. ராஜேஷ்… என்னால அந்த பயத்த முழுசா போக்க முடியல….” அவன் அழுது கொண்டே சொன்னான்.
ராஜேஷ், அர்ஜூனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் துடித்தன. கைகள் முறுக்கேறின. அவன் தன் வலிமையை முடிந்தவரை குறைத்துக் கொண்டு, அர்ஜூனை ஓங்கி அறைந்தான்.
“அடப்பாவி… என்ன சொன்ன? நான் உன்ன முழுசா விரும்பலயா….? இத கேக்கறதுக்கு பதிலா காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தலாம்… இப்பவே என் உயிரு போயிட்டா நல்லா இருக்கும். நீயே இப்படி சொன்னா நான் என்ன பண்ணுவேன்…” ராஜேஷ் வேகமாகப் பேசினான். அவனுக்கு மூச்சு வாங்கியது.
அவன் மங்கிய வெளிச்சத்தில் அர்ஜூனின் கன்னம் சிவந்திருப்பதைக் கண்டான். அவன் வேகமும் கோபமும் உடனே காணாமல் போனது.
“ஓஓஓஓ… ஷிட்… ஷிட்ட்… ஷிட்… சாரிடா…. செல்லம்… சாரிடா… நான் ஒரு முட்டாள்… ஓ ஷிட்… உன்ன இப்படி அடிச்சிட்டேனே…. ஓ மை காட்… ஷிட்…” ராஜேஷ் தன் கைகளைப் பிசைந்து கொண்டான்.
அர்ஜூன் இப்போது அழவில்லை. அவன் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்து வழிந்தது. ராஜேஷ் அடித்த இடத்தில் அவனுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இந்த அடி அவன் தன் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளம். இதைவிட வேறு பெரிய சான்று தேவையில்லை. அவன் ராஜேஷின் புலம்பலை தடுத்த நிறுத்த ஒரு வழியைக் கையாண்டான். ஆம், அர்ஜூன் ராஜேஷின் முகத்தை இழுத்து அவன் இதழுடன் தன் இதழைப் பதித்தான். அங்கு இப்போது அமைதி நிலவியது.
காலையில் சூர்யோதயத்திற்கு சிறிது நேரமே இருந்தது. எவ்வாறு கடலும் கதிரவனும் சந்திக்கும் சந்தியாக்காலம் வருமோ அதுபோல இப்போது இரு உடல்கள் உயிர்கள் உள்ளங்கள் முழுமையாக சந்திக்கப் போகும் சந்தியா காலம். ராஜேஷ், அர்ஜூனின் இதழ்களை விடுவிக்கவே இல்லை. அர்ஜூனும் விடுதலை கேட்க வில்லை. ராஜேஷின் உடற்சூடு இப்போது மிகுதியானது. அவரகள் இருவரும் காதல் மிதமிஞ்சிய காம விளையாட்டைத் துவங்கினர்.
காமம் காதலோடு சேரும் போது, அதுவும் இரு அன்பு கொண்ட உள்ளங்கள் உடல்கள் இணையும் போது, அங்கே எழும் இன்பத்தின் அளவிற்கு எல்லையே கிடையாது. ராஜேஷ், அர்ஜூனின் உடல் முழுதும் எதையோ தொலைத்துவிட்டு தேடுபவனைப் போல அலைந்தான். எங்கும் இதழ் பதித்து, பற்கள் பதிந்து, நகங்கள் கீறி, மூச்சின் வெப்பத்தால் சூடாக்கி, எச்சிலின் ஈரத்தில் குளிரச் செய்து, விரல்களின் அழுத்தத்தால் வலிக்கச் செய்து முத்தங்களின் மென்மையால் வலியை நீக்கி, ராஜேஷ், அர்ஜூனை முழுமையாக தன்னுடையவனாக மாற்றிக் கொண்டிருந்தான்.
அர்ஜூன் இதுநாள் வரையில் யாருக்கும் தராமல் வைத்திருந்த அந்த இன்பப் பொக்கிஷங்கள் எல்லாம் தன் காதலன் ராஜேஷுக்கு தாரை வார்த்தான். ராஜேஷ், மிக மென்மையாக, மிக மிக மென்மையாக, அர்ஜூனுக்குள் ஊடுருவினான். இப்போது அங்கே உள்ளங்கள் மட்டுமல்ல உடல்களும் ஒன்றாயின. அர்ஜூனுக்கு வலிக்கவே இல்லை. ராஜேஷுக்கு இன்னும் பயம் குறையவில்லை. ஆனால் அர்ஜூனின் முகத்தில் தோன்றிய அந்த இன்பத்தின் ஒளியை பார்த்த பிறகுதான் அவனுக்கு முழு நிறைவு ஏற்பட்டது. அவன் அர்ஜூனின் உடற்கூட்டிலிருந்து வெளியேற விரும்பவில்லை. அர்ஜூனும் வெளியேறுமாறு சொல்லவில்லை. இன்று காதலர்களின் கலவியை அந்தப் பகவலவன் கண் கொட்டாது பார்த்துக் கொண்டு மேலே செல்லாமல் நின்றான். இந்த இன்ப வேள்வியின் இனிமையைக் கண்டு சொக்கி நின்றது தென்றலும். பறவைகள் தன் கூடுகளை விட்டு வெளியேறி, இந்தக் காதலர்களின் காம விளையாட்டில் மயங்கி, சத்தம் செய்யாமல் இருந்தன. இயற்கை அப்படியே ஸ்தம்பித்துப் போல் இந்த இச்சை நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தது.
இதோ, ராஜேஷ் தன் உயிரை அர்ஜூனின் உடலோடு சேர்க்கப் போகிறான். அவன் உடல் முழுதும் சிலிர்த்தது. உச்ச கட்டத்தின் சிலிர்ப்பு அல்ல அது. தன் உயிரணுக்கள் அர்ஜூனின் உடலோடு சேரப்போவதை எண்ணி வந்த சிலிர்ப்பு. அவன் வேகம் கூட்டினான். அர்ஜூன் ராஜேஷை தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவர்கள் வியர்வையில் குளித்திருந்தனர். நேரம் நெருங்க நெருங்க ராஜேஷின் காதல் இன்னும் அதிகமாகியது. அவன் அர்ஜூனின் இதழ்களைக் கவ்விக்கொண்டான். இதோ, அவன் காதல் ரசம் அர்ஜூனின் உடலில் பாய்ந்தது. அந்த வெதுவெதுப்பான நிமிடங்களில் இருவரும் கரைந்தனர். அர்ஜூனின் விழிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தன்னை முழுதும் இழந்த உணர்வு. இந்த உணர்ச்சிக்காக அவன் பலநாள் ஏங்கியதுண்டு. இன்று தன் காதலின் கைகளில் சேர்ந்து அவன் இன்பத்துக்காக தன்னை இழந்தபோது, அவன் இந்த பூவுலகின் எந்த ஒரு உயிரனமும் அடையாத இன்பத்தை அடைந்தான். அவன் மனம் இறுமாந்திருந்தது. அறை முழுதும் கலவியின் வாசம். அவர்களோ தங்கள் நிலைகளை மறந்து நினைவினை இழந்து, உணர்ச்சி மேலிட, உறக்கத்தை தழுவினர். இன்னும் ராஜேஷ், அர்ஜூனின் உடற்கூட்டில் தான் தங்கியிருந்தான்.
கலவியின் கவிதை
உன் முகமோ சிவந்து போய்
உன் கண்கள் செருகிக் கொண்டு
போகையிலே
என் கட்டுப்பாடுகளை
என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
நான் நடத்தவில்லை எதையும்.
நீதான் உன் அழகுதான்
வினையூக்கியாகி வினையாடுகிறது.
இதோ முடிந்துவிடும் இந்த விளையாட்டு
என்று நினைத்து நினைத்து
இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே
செல்லுகையில்
இதுவும் கூட நன்றாய்தான் இருக்கிறது
என என் மனம் நினைப்பதை
என்னால் தடுக்க இயலவில்லை.
அது மெல்லிய மனம்
அதன் விருப்பங்களில் தலையிட்டு
அது உடைந்து போவதை நான்
பொறுக்கமாட்டேன்.
என் உடல் முழுதும் ஒரு
இலகுவான பஞ்சுக் கீற்றைப் போல்
காற்றில் பறக்கும் போது
நீதானே என் கைகளைப்
பற்றிக் கொண்டு என்னை
நிலைப்பெறச் செய்கிறாய்.
நம் கைகள் பிண்ணிக் கிடப்பதைப்
பார்த்துத் தான் நான் மண்ணில்
இருப்பதை நம்புகிறேன்.
என் ஐம்புலன்களையும்
உன்னிடத்தில் நான் இழந்து விட்டேன்.
அவை ஒவ்வொன்றிலும் நீ மட்டுமே
நிறைந்திருக்கிறாய்.
உன் முழுமையும் எனக்குத்தான் சொந்தம்.
என் உதடுகள் உன்னை
உரசும் போது நீ
சிலிர்த்துப் போகும் அழகும்,
என் விரல்கள் உன்னை கிள்ளும் போது
நீ சிணுங்கும் அழகும்,
என் அணைப்பில் உன்னை
வீழ்த்தும் போது உன் பணிவும்,
என் இச்சையில் நீ கரையும் போது
உன் மலர்ச்சியும்,
எல்லாமே எனக்குச் சொந்தம்.
நான் உன்னைக் கடைந்து
அமுதம் எடுத்தபோது நீ சிரித்தாயே
அதை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும்.
மென்மையின் எல்லையை நான் தாண்டும் போது
உடனே என்னை தடுத்தாயே
அதை மீண்டும் மீண்டும் காண வேண்டும்.
என் உள்ளத்து ஆசை வரிகளை
நீ ஓசையின்றி எப்போது படித்தாய்?
என் மீசை மயிரோரம் ஒளிந்திருந்த
புன்சிரிப்பைப் பிடுங்கிக் கொண்டு
வன்முறையை ஏன் கொடுத்தாய்?
என் பற்கள் பதிந்த பள்ளங்களில்
உன் வியர்வைக் குளங்கள்.
என் நகங்கள் கீறிய இடங்களில்
குருதித் தடங்கள்.
என் உள்ளத்தின் கூக்குரல்கள்
உன் செவிக்குக் கேட்டது எப்போது?
கள்ளமாய் நான் கைமறைத்த
காதல் கடிதங்கள் உன்
கண்பார்வையில் விழுந்தது எப்படி?
நீ என்னை உள்வாங்கி
உன்னை வெளியிட்டாய்.
நாம் இருவரும் இரண்டறக் கரைந்த
அந்த பொழுதில் தான்
நான் பிறந்த பயன் பெற்றேன்..
(தொடரும்)…..
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி radharajesh18@gmail.com.
No comments:
Post a Comment