Saturday, July 2, 2011

காதலாகி கசிந்துருகி - பகுதி 11


-----------------------------------------------------------------------------------------------------------

காதலாகி கசிந்துருகி - பகுதி 11

----------------------------------------------------------------------------------------------------------

இன்பமயமான வாழ்வின் துவக்கம் ராஜேஷ், அர்ஜூன் இருவருவரது வாழ்விலும் வந்தது. காதலில் அவர்கள் நனைந்தனர். அவர்களது உலகம் இருவருக்குள் சுருங்கிக் கொண்டது. இந்த பிரபஞ்சத்தின் சிறு புள்ளியான நம் உலகின் ஒரு குறும் புள்ளியான மனித வாழ்க்கை, காதலின் பேரொளியில் பிரபஞ்சத்தையே தோற்கடிக்கும் பிரகாசமாய் மாறியது. அவர்களுக்குள் காமத்தின் சுவடுகள் இல்லை. தூய அன்பு, பிரவாகமாய் ஓடி, பெரு நதியாய் பாய்ந்து, அந்தப் பெருங்கடலில் சங்கமித்த வண்ணமாய் இருந்தது. மழைக்காலம் வலுத்தது.
மழைக்காலத்து மாலை வேளைகளில் அர்ஜூன் வீட்டின் மேல் மாடத்தில் அவர்கள் இருவரும் அமர்ந்து மழையின் குளுமையை ரசித்தனர். அந்த வெள்ளி போன்ற நீர்த்துளிகள் தெறித்து விழும் அழகை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அர்ஜூன், இப்போது நல்ல குணமடைந்திருந்தான். அவனால் சற்று மெதுவாக நடக்க முடிந்தது. ஆனாலும் அவன் ராஜேஷ் தூக்கிச் சென்று படுக்கையில் தன்னை கிடத்துவதையே விரும்பினான். ராஜேஷுடன் சேர்ந்து படுத்துக் கொள்ள அவன் விரும்பினாலும், இரவு நேரங்களில் ராஜேஷ் காலால் இடிக்க நேர்ந்தால் அர்ஜூனின் கால் மேலும் வலிக்கக் கூடும் என ராஜேஷ் பயந்ததால் அவர்கள் இருவரும் தனித்தனியே படுத்துக் கொண்டனர். இருவருக்குமே காதலில் இருந்த அவசரம், காமத்தில் இல்லை. ஆயினும், தன்னை கூடிய விரைவில் ராஜேஷுடைய சொத்தாக மாற்றி விட வேண்டும் என்ற எண்ணம் அர்ஜூனுக்கும், கூடிய விரைவில் அர்ஜூனை தன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ராஜேஷுக்கும் இருந்தது. அர்ஜூனின் உடல் குணமடையவே இருவரும் காத்திருந்தனர்.
அன்று ஒரு மழைக்காலத்து மாலை வேளை. ராஜேஷ் அர்ஜூனின் வீட்டு மாடியில் ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்து மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். மழை விடாமல் அதிகமாக பெய்தது. குளிர்காலம் போல கடும் குளிர் நிலவியது. அர்ஜூன் மெதுவாக நடந்து ராஜேஷின் அருகில் வந்தான். அவன் உடல் குளரில் சிலிர்த்திருந்தது. அவன் மெதுவாக ராஜேஷின் மடியில் அமர்ந்தான். தன் கைகளை ராஜேஷின் தோளைச் சுற்று மாலையைப் போல் சுற்றிக் கொண்டான். ராஜேஷும் அர்ஜூனை நன்றாக அணைத்துக் கொண்டான். குளிர் மாறி வெதுவெதுப்பான வெப்பம் பிறந்தது. அர்ஜூன் தன் முகத்தை ராஜேஷின் மார்பில் அழுத்தி வைத்துக் கொண்டான். அங்கு மழையின் ஒலியையும், ராஜேஷின் இதயம் துடிக்கும் ஒலியையும் தவிர வேறெந்த ஒலியும் கேட்கவில்லை.
அர்ஜூனுக்கு மட்டும், ராஜேஷின் இதயத்துடிப்பின் ஓசை “லப்…டப்…” எனக் கேட்கவில்லை… மாறாக “ அர்ஜூன்… அர்ஜூன்..” எனக் கேட்டது. அவன் தன் முகத்தை மேலும் மார்பில் அழுத்தமாகப் பதித்து கண்களை மூடிக்கொண்டான். ராஜேஷ், மெல்ல தன் கையால் அர்ஜூனின் தலையைக் கோதினான். அவன் மென்மையான முடிகளை அளைந்தான். மற்றொரு கையால் அர்ஜூனின் முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான். அவ்வப்போது அர்ஜூனை உச்சிமுகர்ந்தான். அவர்கள் இருவரும் இப்பொது குளிர் நீங்கி வெப்பமாக இருந்தனர். அந்த அணைப்பின் சுகம், நெருக்கத்தின் நீட்சியில் தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் இருவருமே, இந்த மாலைப் பொழுது இப்படியே நீடித்திருப்பதையே விரும்பினர்.
மாலை நன்றாக மங்கி இரவு பிறந்தது. அர்ஜூன், ராஜேஷின் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டு, மெதுவாக எழுந்தான். ராஜேஷின் முகத்தைப் பார்த்தான். இருவரும் விழிகளால் விழுங்கிக் கொண்டனர்.
“ராஜேஷ்….”
“சொல்லுடா செல்லம்….”
“எனக்கு மழைல நனையும் போல இருக்கு….”
“ஓ… நனையலாமே…”
“நீயும் என்னோட சேர்ந்து நனையணும்…”
“கரும்பு தின்னக் கூலியா….?”… ராஜேஷ் சொல்லிவிட்டு அர்ஜூனைப் பார்த்து புன்னகைத்தான்.
அர்ஜூன் மெதுவாக எழுந்து மொட்டைமாடியில் இருள் சூழ்ந்திருந்த பகுதிக்கு வந்தான். தன் ஆடைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடுவித்தான். அவன் வீட்டின் இருபுறமும் நன்றாக மரங்கள் சூழ்ந்து அவர்களை யாரும் கவனிக்க இயலாத வண்ணம் இருந்தது. அவன் மெதுவாக மழையில் நின்று நனைந்தான். ராஜேஷ் அறையை விட்டு வெளியே வந்ததும், தான் கண்ட காட்சியில் அப்படியே விக்கித்து நின்று விட்டான். சந்தனச் சிலையொன்று பொற்சிற்பம் ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தது. அர்ஜூன், ராஜேஷைக் கண்டதும் நாணத்தால் சிவந்தான். மெதுவாக அவன் அருகில் வந்து அவன் உடைகளை களையத் துவங்கினான். இருவரும் உடைகளுக்கு விடுதலைக் கொடுத்தனர்.
ராஜேஷ் அப்படியே அர்ஜூனை அள்ளி அணைத்துக் கொண்டான். அவன் உடல் இதுவரை அறிந்திடாத ஒரு புத்துணர்ச்சியில், பூரிப்பில் ஆழ்ந்தது. அந்த மங்கிய ஒளியில், அவன் அர்ஜூனின் மார்பில் மழைத்துளிகள் பட்டு தெரிப்பதைக் கண்டான். தன் இதழால் அந்த நீர்த்துளிகளை அப்படியே அள்ளிப் பருகினான். அர்ஜூனின் மார்பு நெருப்பால் சுட்டது போன்ற ஒரு உணர்ச்சி. அவன் காதலன் தன் இதழால் வருடும் அந்த வெப்பமான சுகம். அர்ஜூனின் கண்கள் அப்படியே மூடிக்கொண்டன. உடல் இலகுவாக மாறியது. அவன் வாயிலிருந்து இன்பத்தின் ஒலிகள் சிணுங்கல்களாக வெளிப்பட்டன. ராஜேஷ் அப்படியே அர்ஜூனை கைகளில் அள்ளிக் கொண்டான். பின், மெதுவாக அவனைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தினான். பின் மெதுவாக அர்ஜூனின் மீது படர்ந்தான். இனி அவனை யாரும் தடுக்க முடியாது. அவன் ஒரு துளி நீரைக் கூட விடாமல், அர்ஜூனின் உடல் முழுவதும் பரவி இருந்த நீர்த்துளிகளைக் குடித்தான்.
இது என்ன….? நீரைக் குடித்தால் தாகம் தணியும் என்பார்கள்… ஆனால் என் தாகம் அதிகமாகிறதே…. இவன் உடலில் விழுந்தவுடன், இந்த சாதாரண நீர்த்துளியும் தேன் துளியாய் மாறிவிட்டதோ….
ராஜேஷின் இதழ்கள் படாத இடங்களே இல்லை… அர்ஜூனோ இந்த உலகத்திலேயே இல்லை. இதோ, அவன் மனம் கவர்ந்த காதலன் அவனை அணு அணுவாக சுவைக்கிறான். அவன் இத்துணை நாள் சேர்த்து வைத்திருந்த பொக்கிஷங்கள் இப்போது செலவிடப்படுகிறது. ஒவ்வொரு அணுவும் ராஜேஷின் இதழ்களுக்கு நன்றிகள் பல சொல்லின. பிறகொருநாள், என்ன நடந்தது என அர்ஜூனைக் கேட்டால் அவனால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அவனுக்கு என்ன நடந்தது என உண்மையிலேயே தெரியாது. அவன் ஏக்கம், காத்திருப்பு, ஏமாற்றம் எல்லாம் அழிந்தது. அவன் தன் கடவுளின் மீது சொரியப்பட்ட பூவாக இப்போது வாசம் வீசினான். வெப்பம்… உடல் முழுதும் வெப்பம்… குளிர்ச்சி… உள்ளம் முழுதும் குளிர்ச்சி… சிலிர்ப்பின் உச்சத்தில் அவன் பிறப்பு இப்போதுதான் தன் பலனைக் கண்டது.
இந்த ஆடவனின் கைகளில் சிக்குவதற்காகவே அவன் கற்பு காத்திருந்தது. அது இன்னும் ஜொலித்தது இப்போது. அர்ஜூன் எனும் ஒருவன் அழிந்து போனான்… அவன் இப்போது ராஜேஷின் ஒரு அங்கம். அவனின் ஒரு பகுதி… அவன் கைகளில் ஏந்தியிருக்கும் ஒரு மலர்ச் செண்டு… அவன் மார்பில் பூசப்பட்ட சந்தனம்… அவன் வாயில் இடப்பட்ட சர்க்கரை… அவன் கழுத்தில் விழுந்த மாலை… அவன் இடையில் அணியும் கோமேதகக் கச்சை… அவன் ராஜேஷின் உயிர்… ராஜேஷின் உயிர்க்காதல்….
ராஜேஷின் நிலைமை சொல்லொணா சுகத்தில் உழன்றது. தேன் குடித்த வண்டு மயங்குவதைப் போல் அவன் மயக்கத்தில் உழன்றான். ஒவ்வொரு மழைத்துளியையும் அவன் சுவைத்தான். தன் வாழ்நாளில் இதுவரைக் காத்திருந்தது இந்த நொடிக்காக தான்… அர்ஜூன் இனி தனக்கு மட்டுமே சொந்தம்… அவர்களது காதல் வேள்வியில் எழுந்த கரும்புகை போல அந்தக் கருமேகங்கள் எழுந்து நிலவின் ஒளியையும் மறைத்தன. எங்கும் இருள்… பெருமழை… வெளியே… அர்ஜூனின் படுக்கையறையிலோ… எங்கும் ஒளி… அது சங்கமத்தின் ஒளி… காதலர்கள் கூடும் களிப்புத் திருவிழா… இணைப்பின் வானவேடிக்கை…. மின்னல் வெட்டியது… அந்த மின்னலின் ஒளியில் இரு உடல்கள், இரு உயிர்கள், இணைவதை இயற்கையும் கண் கொட்டாமல் பார்த்தது…
ஆனால் அங்கு பரிபூரண சங்கமம் நிகழவில்லை. ராஜேஷ் இன்னும் சில காலம் காத்திருக்கவேண்டும் அல்லது அந்த பரிபூரண சங்கமம் நிகழாமல் இருக்கட்டும் என நினைத்தான். அர்ஜூன் அவன் காதலன். அவனுக்கு மட்டுமே சொந்தமானவன். அப்படியிருக்க ராஜேஷ் இவ்வாறு நினைக்க என்ன காரணம்? அது ராஜேஷின் மிதமிஞ்சிய அன்புதான். ஆம், தான் அர்ஜூனுடன் இணைந்தால் அது அர்ஜூனுக்கு மிகுந்த வலியான ஒரு உறவாகத்தான் இருக்கும். அவரவருடைய உடலியற் கூறுகள் அவ்வாற். ராஜேஷ், ஆண் எழிலின் உச்சம். அர்ஜூன், ஆண் அழகின் கடவுள். அர்ஜூன் மென்மையானவன். சிறியவன்… புணர்ச்சியில் ஈடுபடாத பிஞ்சுத்தேகம். ஊடுருவலின் வலியைப் பொறுக்க இயலாமல் போகலாம். ராஜேஷின் ஆணழகோ, வலியது… பெரியது… அதன் ஊடுருவல் மென்மையாக நிகழ இயலாது. ஆகையால், அவன் தன் உயிருகுயிரான காதலனை, தன் உடல் சுகத்துக்காக காயப்படுத்த விரும்பவில்லை.
என் சுகமே உன்னோடு உன் அருகில் இருப்பதுதான் அர்ஜூன்… கேவலம் இந்தக் காமச் சேர்க்கையில் மாத்திரம் நான் மகிழ்ந்துவிடுவதில்லை. இதோ இன்று உன் உடலின் ஒவ்வொரு அங்குலத்தின் சுவையையும் நான் அறிந்து கொண்டதே ஒரு தேவ சுகம். என்னால் உன்னை காயப்படுத்த இயலாது. உனக்கு வலிக்கும் என்ற எண்ணமே என்னைக் கொன்றுவிடும். ஏற்கனவே உன்னை சில நாட்கள் முடமாக்கி படுக்க வைத்த செயலுக்காக நான் தினம் தினம் துடிக்கிறேன்… அதனால், இப்போதைக்கு எனக்கு இது போதும்… என் உடலும் உள்ளவும் நிறைவாய் இருக்கிறது.
அர்ஜூன் தன் நினைவிற்குத் திரும்பிய போது அவன் மிகவும் வியந்த ஒரு விஷயம் என்னவென்றால், ராஜேஷ் தன்னை புணர்ச்சி கொள்ளாதது தான். அவனுக்கு அது அவ்வளவு பெரிதல்ல.. ராஜேஷுடன் சேர்ந்திருப்பதே அவனுக்கு நிறைவான மகிழ்ச்சி. ஆனாலும், ராஜேஷ் தன்னைப் புணராமல் இருப்பதால், ஒருவேளை அவனுக்கு தன் மீது விருப்பம் முழுமையாக இல்லாமல் இருக்குமோ என்ற எண்ணம் அர்ஜுனுக்குத் தோன்றி அவனை வதைத்தது. ஒருவேளை தன்னால் அவனுக்கு முழுமையான இன்பத்தை தர இயலாது என அவன் நினைத்தானோ என்ற சந்தேகம் தோன்றி அவனைக் கொன்றது. அவன் மெல்லவும் முடியாமல் வெளியே கேட்கவும் முடியாமல் தவித்தான்.
ராஜேஷ்…. நான் உனக்குச் சொந்தமானவன். என்னை நீ முழுமையாக அடைந்துவிடு ராஜேஷ்… என்னை எடுத்துக்கொள்…. உனக்கு என்னை அவ்வளவு பிடித்திருந்தால் என்னை முழுமையாக புணர்ச்சி கொள்…
இருவரின் மனமும் இருவேறு வழியில் எண்ணி தவித்தது. அவர்களுக்கிடையேயான அபரிமிதமான காதலே அவர்களுக்கு இப்போது வலியை கொடுத்தது….

இந்தக் கவிதை, நானும் என் காதலனும் சேர்ந்த நொடிகளை நினைத்து சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது. இதை, ராஜேஷ், அர்ஜூன் காதலுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

அந்த மழைக்காலத்து நள்ளிரவில்
மங்கிய வெளிச்சம் ஒளிரும்
மழைத்துளி உன் மார்பில்
உருண்டோடுகையில், என்
உதடுகளால் உறிஞ்சி என்
உயிர்த்தாகம் தணித்துக் கொண்டேன்.

ஊரெல்லாம் உறங்குவதாய் பாசாங்கு செய்து
உன்னுடன் நான் தனித்திருக்கையில்
இந்த மழை வந்து மோகனம் பாடுகிறதே..
நம் அணைப்பின் நெருக்கத்தில் யாரும்
நுழைய முடியாதென நான் நினைக்க,
துளித்துளியாய் மழை இறங்கிவிட்டது.
ஆனால் பிரிக்கவில்லை நம்மை, பதிலாக
சேர்த்தது இன்னும் நெருக்கமாய்.

உன்னைக் கழுவிச் செல்வதாய் காட்டி
தழுவிச் சென்ற அந்தத் தேன்மழைத் துளிகளை,
நழுவிச் செல்லாது என் நா சுவைத்த போது
எனக்குள் நான் சிலிர்த்துக் கொண்டேன்.
உன் உடல் மென்மையில் இந்த
நீர்த்துளிகள் நீந்திச் செல்வதை
என் இதழ் மென்மை விரும்பவில்லை.
அணையிட்டு அப்படியே விழுங்கியது.

நான் ஊதி ஊதி உன் உடலை
உலர்த்தப் பார்த்தேன்.
என் இன்ப ஊற்றுகளோ
பெருக்கெடுத்து ஓடியது.
என் ஆசை மழையில் நனைந்த
உன் உடலுக்குத்தான்
எத்தனை ஈரம்? இருக்கட்டும்.
உள்ளத்தில் தான் இல்லை.
உன் அழகை என் மீது பாய்ச்சி
என் உள்ளத்தை அன்றாடம்
கொல்லுகிறதல்லவா?
இந்த மழைக்கால இரவிற்கும்
இரக்கம் இல்லை.
முடியாமல் நீள்கிறது.
நீயோ நனைந்து கொண்டே
இருக்கிறாய் அப்படியே.
உன் உடைகள் எல்லாம் சமர்த்து.
மாரியின் குளுமையை அப்படியே
நுகர்ந்து கொண்டு தரையில்
கிடக்கிறதே.. வெட்கமில்லாதவை.
நிலா கூட இந்த வேள்வியை
காண நாணி காரில் மறைந்து விட்டது.

என் கண்கள் இவ்வளவு
அழகை இதற்கு முன்
கண்டதில்லை. உன் கால்
கட்டைவிரலைத் தவிர.
உன் உடல் இத்தனை நளினமானது
என நான் அறியவில்லை.
என் விரல்கள் ஏனோ
மழைத்துளியைப் போல்
எங்கெங்கும் கோலமிட,
என் மனமோ உன் உடலை
யாழென்று நினைத்ததோ
மீட்டிக் கொண்டே இருந்தது.

(தொடரும்)….. 
உங்கள் மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். எனது மின்னஞ்சல் முகவரி  radharajesh18@gmail.com.

No comments:

Post a Comment